Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் அருகில் உள்ள மூவேந்தர் தெருவில் 50-செண்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை போலியான நிலபத்திரம் தயார்செய்து ஆக்கிரமிப்பாளர்கள் அந்த நிலத்தை வாத்து மற்றும் கோழி பன்னை வைத்து பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கபட்டு ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் சேலையூர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவிக்கபட்டு காவல்துறை உதவியுடன் அதிரடி நடவடிக்கை எடுக்கபட்டு செயல் அலுவலர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கம்பிவேலி, இரும்பு கதவு, கோழிபண்ணை கூண்டு போன்றவற்றை அகற்றி அழித்தனர்.
மேலும் இந்த நிலம் மாடம்பாக்கம் கோயிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிப்பு பலகை வைக்கபட்டது. இது குறித்து சேலையூர் காவல்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.